Vani Saraswathi SongsNon commercial web site, available to every one. Use it if you find them useful. Encouraged to copy and distribute if needed. |
வெள்ளைத் தாமரைப் பூ வி லிருப்பாள்
வீணை செய்யு மொலியி லிருப்பாள்.....
வீடுதோறுங் கலையின் விளக்கம்
வீதிதோறு மிரண்டொரு பள்ளி
நாடு முற்றிலு முள்ளன வூ ர்கள்
நகர்க ளெங்கும் பலபல பள்ளி
தேடு கல்வியி லாததொ ருரைத்
தீயினுக் கிரையாக மடுத்தல்
கேடு தீர்க்கு மமுதெமெ னன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர் (வெள்ளைத்)
நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர
அதுவு மற்றவர் வாய்ச்சொ லருளீர்
ஆண்மையாள ருழைப்பினை நல்கீர்
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்
எதுவு நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுதும் வாரீர்.
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய் பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய் எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய் கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும் அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி காணும் பொருளில் தோன்றும் கலைமணி வேண்டும் வரம் தரும் வேணி நான்முகன் நாயகி மோகனரூபிணி நான்மறை போற்றும் தேவி நீ வானவர்க்கமுதே தேனருள் சிந்தும் கான மனோகரி கல்யாணி அருள்வாய் நீ இசை தர வா நீ இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம் அம்மா பாட வந்தோம்