Non commercial website, for knowledge sharing. Free to copy and use, if you find it useful.
Pooja for Muruga |
Preliminaries பூஜாரம்பம்
Oom............
ஆசமனம்: ஷுக்லாம் பரதரம் தேவம் ஷஷிவர்ணம் சதுர்புஜம் |
ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்னொப ஷாந்தயே ||
ஓம் தத்புருஷாயா வித்மஹே மஹா ஸேனாய தீமஹீ தன்ன ஷண்முக ப்ரசோதயாத்.
ஓம் குக்குட த்வஜாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் ||
ஓம் கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி | தந்நோ ஸ்கந்தப் ப்ரசோதயாத் ||
உருவாய் அருவாய் உளதாய் இலதாய் | மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் ||
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் | குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ||
அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ய்
பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்களாறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகுமுய்ய
[கந்த புராணம் 1-11-62 - Kacchiappa SivAchAriyAr to Lord Murugan that Supreme Being (பிரமம்) which is capable of manifesting himself in an abstract or concrete form, all in one and one in all, is the only way for salvation.]
சஷ்ட்டியை நோக்க சரவணபவனார்
சிஷ்ட்டருக் குதவும்செங்கதிர் வேலோன்
பாதமிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாட கிண்கிணி யாட
மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் ... 5
கையில் வேலால் எனைக் காக்கவென்று வந்து
வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திர முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக -10
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக -15
சரவணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரவண வீரா நமோ நம
நிபவ சரவண நிறநிற நிறென -20
வசர ஹணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டா யுதம் பாச அங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க -25
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
ஐயும் கிலியும் அடைவுடன்செளவும்
உய்யொளி செளவும் உயிர் ஐயும் கிலியும்
கிலியும் செளவும் கிளரொளி ஐயும்
நிலை பெற் றென்முன் நித்தமும் ஒளிரும் -30
சண்முகம் நீயும் தணியொளி யொவ்வும்
குண்டலி யாம் சிவ குகன்தினம் வருக
ஆறுமுகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் -35
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
ஈராறு செவியில் இலகு குண்டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல் பூஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் -40
முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழகுடைய திருவயிறு உந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீராவும்
இருதொடை அழகும் இணைமுழந்தாளும் -45
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென
நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண -50
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து -55
முந்து முந்து முருகவேள் முந்து
என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து தவும்
லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென்று -60
உன்திரு வடியை உருதி யென்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க
என் உயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க -65
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க -70
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை இரத்ன வடிவேல் காக்க -75
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க -80
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க
நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண்குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க -85
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க
கைக ளிரண்டும் கருணைவேல் காக்க -90
முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
நாபிக் கமலம் நல்வேல் காக்க
முப்பால் நாடியை முனை வேல் காக்க -95
எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனக வேல் காக்க
வரும் பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அறையிருள் தன்னில் அனையவேல் காக்க -100
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க -105
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள்தின்னும் புழக்கடை முனியும் -110
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும்
அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிக் காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லினும் இருட்டினும் எதிர்படும் அண்ணரும் -115
கனபூசை கொள்ளும் காளியோடனே வரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர்களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை அடியினில் அரும்பாவைகளும் -120
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
பாவைகளுடனே பலகலசத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் -125
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
கால தூதாள் எனைக்கண்டாற் கலங்கிட -130
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
வாய்விட்டலறி மதிகெட்டோட
படியினில் முட்ட பாசக்க யிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கால்கை முறிய -135
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்குச் சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் -140
பற்று பற்று பகலவன் தணலொரி
தணலரி தணலரி தணலது வாக
விடு விடு வேலை வெருண்டது வோட
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோட -145
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் -150
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிருதி
பக்கப் பிளவை படர் தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத்து அரணை பருஅரை யாப்பும் -155
எல்லாப் பிணியும் எந்தனைக் கண்டால்
நில்லா தோட நீ எனக் கருள்வாய்
ஈரேழ் உலகமும் எனக்கு உறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் -160
உன்னைத் துதிக்க உன் திருநாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே
பாரபுர பவனே பவம்ஒளி பவனே
அரிதிரு மருகா அமரா பதியைக் -165
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வேலவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை ஏற்ற இனியவேல் முருகா
தணிகா சலனே சங்கரன் புதல்வா -170
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழநிப் பதிவாழ் பால குமாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே -175
காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யான் உனைப் பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை -180
நேச முடன்யான் நெற்றியில் அணியப்
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும்
மெத்த மெத் தாக வேலா யுதனார் -185
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் -190
வாழ்க வாழ்க வாரணத்துவசம்
வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்தால்
பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன் -195
பெற்றவள்குறமகள் பெற்றவளாமே
பிள்ளையென் றன்பாய் பிரிய மளித்து
மைந்தனென் மீது உன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள் செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய -200
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி
நேச முடன்ஒரு நினைவது வாகி
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச் -205
சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே செபித்து உகந்து நீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலது அருளுவர் -210
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளுமீ ரெட்டா வாழ்வர்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை -215
வழியாற் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப் பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
சர்வ சத்துரு சங்கா ரத்தடி -220
அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத்மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் -225
சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி -230
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கு ஓரரசே -235
மயில்நட மிடுவோய் மலர் அடி சரணம்
சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
ஸ்ரீ கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று.
... விநாயகர் வாழ்த்து ... கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் ...... 5 சிற்பர கணபதே நற்கதியும் தந்தருள்வாய் கணபதி தாளிணையைக் கருத்தினில் வைத்திட்டேன் அச்சம் தீர்த்து என்னை ரக்ஷித்திடுவீரே. ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் சரவணபவ குகா சரணம் சரணம் ...... 10 குருகுகா சரணம் குருபரா சரணம் சரணம் அடைந்திட்டேன் கந்தா சரணம் தனைத் தானறிந்து நான் தன்மயமாகிடவே ஸ்கந்தகிரி குருநாதா தந்திடுவீர் ஞானமுமே தத்தகிரி குருநாதா வந்திடுவீர் வந்திடுவீர் ...... 15 அவதூத சத்குருவாய் ஆண்டவனே வந்திடுவீர் அன்புருவாய் வந்தென்னை ஆட்கொண்ட குருபரனே அறம் பொருள் இன்பம் வீடுமே தந்தருள்வாய் தந்திடுவாய் வரமதனை ஸ்கந்தகுருநாதா ஷண்முகா சரணம் சரணம் ஸ்கந்த குரோ ...... 20 காத்திடுவாய் காத்திடுவாய் ஸ்கந்தகுரு நாதா போற்றிடுவேன் போற்றிடுவேன் புவனகுரு நாதா போற்றி போற்றி ஸ்கந்தா போற்றி போற்றி போற்றி முருகா போற்றி அறுமுகா போற்றி அருட்பதம் அருள்வாய் ...... 25 தகப்பன் ஸ்வாமியே என் இதயத்துள் தங்கிடுவாய் ஸ்வாமி மலைதனில் சொன்னதனைச் சொல்லிடுவாய் சிவகுரு நாதா செப்பிடுவாய் ப்ரணவமதை அகக்கண் திறக்க அருள்வாய் உபதேசம் திக்கெலாம் வென்று திருச்செந்தில் அமர்ந்தோனே ...... 30 ஆறுமுக ஸ்வாமி உன்னை அருட்ஜோதியாய்க் காண அகத்துள்ளே குமரா நீ அன்பு மயமாய் வருவாய் அமரத் தன்மையினை அனுக்கிரகித்திடுவாயே வேலுடைக் குமரா நீ வித்தையும் தந்தருள்வாய் வேல் கொண்டு வந்திடுவாய் காலனை விரட்டிடவே ...... 35 தேவரைக் காத்த திருச்செந்தில் ஆண்டவனே திருமுருகன் பூண்டியிலே திவ்ய ஜோதியான கந்தா பரஞ் ஜோதியும் காட்டி பரிபூர்ணமாக்கிடுவாய் திருமலை முருகா நீ திடஞானம் அருள் புரிவாய் செல்வமுத்துக் குமரா மும்மலம் அகற்றிடுவாய் ...... 40 அடிமுடி யறியவொணா அண்ணா மலையோனே அருணாசலக் குமரா அருணகிரிக்கு அருளியவா திருப்பரங்கிரிக் குகனே தீர்த்திடுவாய் வினை முழுதும் திருத்தணி வேல்முருகா தீரனாய் ஆக்கிடுவாய் எட்டுக்குடிக் குமரா ஏவல்பில்லி சூனியத்தை ...... 45 பகைவர் சூதுவாதுகளை வேல்கொண்டு விரட்டிடுவாய் எல்லாப் பயன்களும் எனக்குக் கிடைத்திடவே எங்கும் நிறைந்த கந்தா எண்கண் முருகா நீ என்னுள் அறிவாய் நீ உள்ளொளியாய் வந்தருள்வாய் திருப்போருர் மாமுருகா திருவடியே சரணமய்யா ...... 50 அறிவொளியாய் வந்து நீ அகக்கண்ணைத் திறந்திடுவாய் திருச்செந்தூர் ஷண்முகனே ஜகத்குருவிற் கருளியவா ஜகத்குரோ சிவகுமரா சித்தமலம் அகற்றிடுவாய் செங்கோட்டு வேலவனே சிவானுபூதி தாரும் சிக்கல் சிங்காரா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் ...... 55 குன்றக்குடிக் குமரா குருகுகனாய் வந்திடப்பா குமரகிரிப் பெருமானே மனத்தையும் மாய்த்திடுவீர் பச்சைமலை முருகா இச்சையைக் களைந்திடப்பா பவழமலை ஆண்டவனே பாவங்களைப் போக்கிடப்பா விராலிமலை ஷண்முகனே விரைவில் நீ வந்திடப்பா ...... 60 வயலூர் குமாரகுரோ ஞானவரமெனக் கருள்வீரே வெண்ணைமலை முருகா மெய்வீட்டைத் தந்திடுவீர் கதிர்காம வேலவனே மனமாயை அகற்றிடுவாய் காந்த மலைக் குமரா கருத்துள் வந்திடுவீர் மயிலத்து முருகா நீ மனத்தகத்துள் வந்திடுவீர் ...... 65 கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் குமரமலை குருநாதா கவலையெலாம் போக்கிடுவீர் வள்ளிமலை வேல்முருகா வேல்கொண்டு வந்திடுவீர் வடபழனி ஆண்டவனே வல்வினைகள் போக்கிடுவீர் ஏழுமலை ஆண்டவனே எத்திக்கும் காத்திடுவீர் ...... 70 ஏழ்மை அகற்றிக் கந்தா எமபயம் போக்கிடுவீர் அசையாத நெஞ்சத்தில் அறிவாக நீ அருள்வாய் அறுபடைக் குமரா மயிலேறி வந்திடுவாய் பணிவதே பணியென்று பணித்தனை நீ எனக்கு பணிந்தேன் கந்தா உன்பாதம் பணிந்துவப்பேன் ...... 75 அருட்பெருஞ் ஜோதியே அன்பெனக் கருள்வாயே படர்ந்த அன்பினை நீ பரப்பிரம்மம் என்றனையே உலகெங்கும் உள்ளது ஒருபொருள் அன்பேதான் உள்ளுயிராகி இருப்பதும் அன்பென்பாய் அன்பே குமரன் அன்பே ஸ்கந்தன் ...... 80 அன்பே ஓம் என்னும் அருள்மந்திரம் என்றாய் அன்பை உள்ளத்திலே அசையாது அமர்த்திடுமோர் சக்தியைத் தந்து தடுத்தாட் கொண்டிடவும் வருவாய் அன்பனாய் வந்தருள் ஸ்கந்தகுரோ யாவர்க்கும் இனியன் நீ யாவர்க்கும் எளியன் நீ ...... 85 யாவர்க்கும் வலியன் நீ யாவர்க்கும் ஆனோய் நீ உனக்கொரு கோயிலை என் அகத்துள்ளே புனைவேனே சிவசக்திக் குமரா சரணம் சரணம் ஐயா அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய் நிழல்வெயில் நீர்நெருப்பு மண்காற்று வானதிலும் ...... 90 பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய் யானென தற்ற மெய்ஞ் ஞானம் தருள்வாய் நீ முக்திக்கு வித்தான முருகா கந்தா சதுர்மறை போற்றும் ஷண்முக நாதா ...... 95 ஆகமம் ஏத்தும் அம்பிகை புதல்வா ஏழையைக் காக்க நீ வேலேந்தி வந்திடுவாய் தாயாய்த் தந்தையாய் முருகா தக்கணம் நீ வருவாய் சக்தியும் சிவனுமாய்ச் சடுதியில் நீ வருவாய் பரம்பொருளான பாலனே ஸ்கந்தகுரோ ...... 100 ஆதிமூலமே அருவாய் உருவாய் நீ அடியனைக் காத்திட அறிவாய் வந்தருள்வாய் உள்ளொளியாய் முருகா உடனே நீ வா வா வா தேவாதி தேவா சிவகுரோ வா வா வா வேலாயுதத்துடன் குமரா விரைவில் நீ வந்திடப்பா ...... 105 காண்பன யாவுமாய்க் கண்கண்ட தெய்வமாய் வேதச் சுடராய் மெய்கண்ட தெய்வமே மித்தையாம் இவ்வுலகை மித்தையென்று அறிந்திடச்செய் அபயம் அபயம் கந்தா அபயம் என்று அலறுகின்றேன் அமைதியை வேண்டி அறுமுகவா வாவென்றேன் ...... 110 உன்துணை வேண்டினேன் உமையவள் குமரா கேள் அச்சம் அகற்றிடுவாய் அமைதியைத் தந்திடுவாய் வேண்டியது உன்அருளே அருள்வது உன் கடனேயாம் உன் அருளாலே உன்தாள் வணங்கிட்டேன் அட்டமா சித்திகளை அடியனுக்கு அருளிடப்பா ...... 115 அஜபை வழியிலே அசையாமல் இருத்திவிடு சித்தர்கள் போற்றிடும் ஞானசித்தியும் தந்துவிடு சிவானந்தத் தேனில் திளைத்திடவே செய்துவிடு அருள் ஒளிக் காட்சியை அகத்துளே காட்டிவிடு அறிவை அறிந்திடும் அவ்வருளையும் நீ தந்துவிடு ...... 120 அனுக்கிரகித்திடுவாய் ஆதிகுருநாதா கேள் ஸ்கந்தகுரு நாதா ஸ்கந்தகுரு நாதா தத்துவம் மறந்து தன்னையும் நான் மறந்து நல்லதும் கெட்டதும் நான் என்பதும் மறந்து பாவ புண்ணியத்தோடு பரலோகம் மறந்திடச்செய் ...... 125 அருள் வெளிவிட்டு இவனை அகலாது இருத்திடுவாய் அடிமையைக் காத்திடுவாய் ஆறுமுகக் கந்தகுரோ சித்தியிலே பெரிய ஞானசித்தி நீ அருள சீக்கிரமே வருவாய் சிவானந்தம் தருவாய் சிவானந்தம் தந்தருளி சிவசித்தர் ஆக்கிடுவாய் ...... 130 சிவனைப் போல் என்னைச் செய்திடுவது உன் கடனே சிவசத் குருநாதா சிவசத் குருநாதா ஸ்கந்த குருநாதா கதறுகிறேன் கேட்டிடுவாய் தாளினைப் பிடித்தேன் தந்திடு வரம் எனக்கு திருவருட் சக்தியைத் தந்தாட் கொண்டிடுவாய் ...... 135 சத்ருப் பகைவர்களை ஷண்முகா ஒழித்திட்டு கிழக்குத் திசையிலிருந்து க்ருபாகரா காப்பாற்றும் தென்கிழக்குத் திசையிலிருந்து தீனபந்தோ காப்பாற்றும் தென்திசையிலும் என்னைத் திருவருளால் காப்பாற்றும் தென்மேற்கிலும் என்னைத் திறன்வேலால் காப்பாற்றும் ...... 140 மேற்குத் திக்கில் என்னை மால்மருகா ரக்ஷிப்பாய் வடமேற்கிலும் என்னை மயிலோனே ரக்ஷிப்பாய் வடக்கில் என்னைக் காப்பாற்ற வந்திடுவீர் சத்குருவாய் வடகிழக்கில் எனக்காக மயில்மீது வருவீரே பத்துத் திக்குத் தோறும் எனை பறந்துவந்து ரக்ஷிப்பாய் ...... 145 என் சிகையையும் சிரசினையும் சிவகுரோ ரக்ஷிப்பாய் நெற்றியும் புருவமும் நினதருள் காக்கட்டும் புருவங்களுக்கிடையே புருஷோத்தமன் காக்கட்டும் கண்கள் இரண்டையும் கந்தவேல் காக்கட்டும் நாசிகள் இரண்டையும் நல்லவேல் காக்கட்டும் ...... 150 செவிகள் இரண்டையும் சேவற்கொடி காக்கட்டும் கன்னங்கள் இரண்டையும் காங்கேயன் காக்கட்டும் உதட்டினையும் தான் உமாசுதன் காக்கட்டும் நாக்கை நன் முருகன் நயமுடன் காக்கட்டும் பற்களை ஸ்கந்தன் பலம்கொண்டு காக்கட்டும் ...... 155 கழுத்தை ஸ்கந்தன் கைகளால் காக்கட்டும் தோள்கள் இரண்டையும் தூய வேல் காக்கட்டும் கைகள் விரல்களைக் கார்த்திகேயன் காக்கட்டும் மார்பையும் வயிற்றையும் வள்ளிமணாளன் காக்கட்டும் மனத்தை முருகன்கை மாத்தடிதான் காக்கட்டும் ...... 160 ஹ்ருதயத்தில் ஸ்கந்தன் இனிது நிலைத்திருக்கட்டும் உதரத்தை யெல்லாம் உமைமைந்தன் காக்கட்டும் நாபிகுஹ்யம் லிங்கம் நவயுடைக் குதத்தோடு இடுப்பை முழங்காலை இணையான கால்களையும் புறங்கால் விரல்களையும் பொருந்தும் உகிர் அனைத்தையுமே ...... 165 உரோமத் துவாரம் எல்லாம் உமைபாலா ரக்ஷிப்பாய் தோல் ரத்தம் மஜ்ஜையையும் மாம்சமென்பு மேதசையும் அறுமுகவா காத்திடுவீர் அமரர் தலைவா காத்திடுவீர் என் அகங்காரமும் அகற்றி அறிவொளியாய் இருந்தும் முருகா எனைக் காக்க வேல் கொண்டு வந்திடுவீர் ...... 170 பாபத்தைப் பொசுக்கிப் பாரெல்லாம் சிறப்புறவே ஓம் ஸெளம் சரவணபவ ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் என்றும் க்லௌம் ஸௌம் நமஹ என்று சேர்த்திடடா நாள்தோறும் ஓமிருந்து நமஹவரை ஒன்றாகச் சேர்த்திடடா ஒன்றாகக் கூட்டியுமே உள்ளத்திலே இருத்தி ...... 175 ஒருமனத் தோடு நீ உருவையும் ஏத்திடடா முருகனின் மூலமிது முழுமனத்தோடு ஏத்திட்டால் மும்மலம் அகன்றுவிடும் முக்தியுந்தன் கையிலுண்டாம் முக்தியை வேண்டியுமே எத்திக்கும் செல்ல வேண்டாம் முருகன் இருப்பிடமே முக்தித் தலம் ஆகுமப்பா ...... 180 ஹ்ருதயத்தில் முருகனை இருத்திவிடு இக்கணமே இக்கணமே மூலமந்த்ரம் ஏத்திவிடு ஏத்திவிடு மூலமதை ஏத்துவோர்க்கு காலபயம் இல்லையடா காலனை நீ ஜயிக்க கந்தனைப் பற்றிடடா சொன்னபடிச் செய்தால் சுப்ரமண்ய குருநாதன் ...... 185 தண்ணொளிப் பெருஞ்சுடராய் உன்னுள்ளே தானிருப்பான் ஜகமாயை ஜயித்திடவே செப்பினேன் மூலமுமே மூலத்தை நீ ஜபித்தே முக்தனுமாகிடடா அக்ஷர லக்ஷமிதை அன்புடன் ஜபித்துவிடில் எண்ணிய தெலாம்கிட்டும் எமபய மகன்றோடும் ...... 190 மூவுலகும் பூஜிக்கும் முருகனருள் முன்னிற்கும் பூவுலகில் இணையற்ற பூஜ்யனுமாவாய் நீ கோடித்தரம் ஜபித்துக் கோடிகாண வேண்டுமப்பா கோடிகாணச் சொன்னதை நீ நாடிடுவாய் மனமே ஜன்மம் கடைத்தேற ஜபித்திடுவாய் கோடியுமே ...... 195 வேதாந்த ரகசியமும் வெளியாகும் உன்னுள்ளே வேத சூட்சுமத்தை விரைவாகப் பற்றிடலாம் சுப்ரமண்யகுரு ஜோதியாயுள் தோன்றிடுவான் அருட் பெரும் ஜோதியான ஆறுமுக ஸ்வாமியுமே அந்தர் முகமிருந்து ஆட்கொள்வான் சத்தியமாய் ...... 200 சித்தியையும் முக்தியையும் ஸ்கந்தகுரு தந்திடுவான் நின்னையே நான் வேண்டி நித்தமும் ஏத்துகிறேன் மெய்யறிவாகக் கந்தா வந்திடுவாய் இவனுளே நீ வந்திடுவாய் மருவிடுவாய் பகுத்தறிவாகவே நீ பகுத்தறி வோடிவனைப் பார்த்திடச் செய்திடப்பா ...... 205 பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான் பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய் திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210 பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய் ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய் ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215 பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய் பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய் தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய் எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய் ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220 சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே சரவண பவனே சரவண பவனே உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன் உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225 சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய் இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான் இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான் மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான் ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230 சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம் காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய் சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய் நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய் திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235 திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய் நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில் நித்யானந்தமே நின்னுரு வாகையினால் அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240 ஞான பண்டிதா நான்மறை வித்தகா கேள் ஸ்கந்த குருநாதா ஸ்கந்த குருநாதா கேள் மெய்ப்பொருளைக் காட்டி மேன்மை அடைந்திடச்செய் வினைகள் யாவையுமே வேல்கொண்டு விரட்டிடுவாய் தாரித்திரியங்களை உன் தடி கொண்டு விரட்டிடுவாய் ...... 245 துக்கங்கள் அனைத்தையும் தொலைதூரம் போக்கிடுவாய் பாப உடலைப் பரிசுத்த மாக்கிடுவாய் இன்ப துன்பத்தை இருவிழியால் விரட்டிடுவாய் ஆசைப் பேய்களை அறவே நசுக்கிடுவாய் அகந்தைப் பிசாசை அழித்து ஒழித்திடடா ...... 250 மெய்யருளாம் உன்னருளில் முருகா இருத்திடுவாய் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே ஆறுமுகமான குரோ அறிந்திட்டேன் உன் மகிமை இக்கணமே வருவாய் என் ஸ்கந்த குருவே நீ என்னைக் காத்திடவே எனக்கு நீ அருளிடவே ...... 255 அரைக் கணத்தில் நீயும் ஆடி வருவாயப்பா வந்தெனைத் தடுத்து வலிய ஆட்கொள் வரதகுரோ அன்புத் தெய்வமே ஆறுமுக மானவனே சுப்ரமண்யனே சோகம் அகற்றிடுவாய் ஞான ஸ்கந்தரே ஞானம் அருள்வாய் நீ ...... 260 ஞான தண்ட பாணியே என்னை ஞான பண்டிதனாக்கிடுவாய் அகந்தையெல்லாம் அழித்து அன்பினை ஊட்டிடுவாய் அன்பு மயமாக்கி ஆட்கொள்ளு வையப்பா அன்பை என் உள்ளத்தில் அசைவின்றி நிறுத்திவிடு அன்பையே கண்ணாக ஆக்கிக் காத்திடுவாய் ...... 265 உள்ளும் புறமும் உன்னருளாம் அன்பையே உறுதியாக நானும் பற்றிட உவந்திடுவாய் எல்லை இல்லாத அன்பே இறைவெளி என்றாய் நீ அங்கிங்கெனாதபடி எங்கும் அன்பென்றாய் அன்பே சிவமும் அன்பே சக்தியும் ...... 270 அன்பே ஹரியும் அன்பே ப்ரமனும் அன்பே தேவரும் அன்பே மனிதரும் அன்பே நீயும் அன்பே நானும் அன்பே சத்தியம் அன்பே நித்தியம் அன்பே சாந்தம் அன்பே ஆனந்தம் ...... 275 அன்பே மெளனம் அன்பே மோக்ஷம் அன்பே ப்ரம்மமும் அன்பே அனைத்தும் என்றாய் அன்பிலாத இடம் அங்குமிங்கு மில்லை என்றாய் எங்கும் நிறைந்த அன்பே என் குருநாதனப்பா அன்பில் உறையும் அருட்குரு நாதரே தான் ...... 280 ஸ்கந்தாஸ்ரமத்தில் ஸ்கந்தகுரு வானான்காண் மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய் ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285 எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய் முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன் நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290 விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன் ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய் சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295 ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும் மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும் கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300 கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305 புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310 ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும் பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள் கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய் சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315 கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில் ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய் அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய் சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320 பேரின்ப மகிழ்ச்சியையும் பெருகிடச் செய்திடப்பா பரமானந்தமதில் எனை மறக்க பாலிப்பாய் மால் மருகா வள்ளி மணவாளா ஸ்கந்தகுரோ சிவகுமரா உன்கோயில் ஸ்கந்தகிரி என்றுணர்ந்தேன் ஜோதிப்பிழம்பான சுந்தரனே பழனியப்பா ...... 325 சிவஞானப் பழமான ஸ்கந்தகுருநாதா பழம் நீ என்றதினால் பழனிமலை யிருந்தாயோ திருவாவினன் குடியில் திருமுருகன் ஆனாயோ குமரா முருகா குருகுகா வேலவனே அகத்தியர்க்குத் தந்து ஆட்கொண்டாய் தமிழகத்தை ...... 330 கலியுக வரதனென்று கலசமுனி உனைப்புகழ்ந்தான் ஒளவைக்கு அருள் செய்த அறுமுகவா ஸ்கந்தகுரோ ஒழுக்கமொடு கருணையையும் தவத்தையும் தந்தருள்வாய் போகருக்கருள் செய்த புவன சுந்தரனே தண்டபாணித் தெய்வமே தடுத்தாட் கொண்டிடப்பா ...... 335 ஆண்டிக் கோலத்தில் அணைத்திடுவாய் தண்டுடனே தெய்வங்கள் போற்றிடும் தண்டாயுத ஜோதியே ஸ்கந்தகிரி மேலே ஸ்கந்தகிரி ஜோதி யானவனே கடைக்கண்ணால் பார்த்திடப்பா கருணையுள்ள ஸ்கந்தகுரோ ஏழையைக் காத்திடப்பா ஏத்துகிறேன் உன்நாமம் ...... 340 உன்னை அன்றி வேறொன்றை ஒருபோதும் நம்புகிலேன் கண்கண்ட தெய்வமே கலியுக வரதனே கந்தன் என்ற பேர்சொன்னால் கடிதாக நோய்தீரும் புவனேஸ்வரி மைந்தா போற்றினேன் திருவடியை திருவடியை நம்பினேன் திருவடி சாட்சியாக ...... 345 புவனமாதா மைந்தனே புண்ணிய மூர்த்தியே கேள் நின் நாமம் ஏத்துவதே நான் செய்யும் தவமாகும் நாத்தழும் பேறவே ஏத்திடுவேன் நின்நாமம் முருகா முருகாவென்றே மூச்செல்லாம் விட்டிடுவேன் உள்ளும் புறமும் ஒருமுருகனையே காண்பேன் ...... 350 அங்கிங்கு எனாதபடி எங்குமே முருகனப்பா முருகன் இலாவிட்டால் மூவுலக மேதப்பா அப்பப்பா முருகாநின் அருளே உலகமப்பா அருளெல்லாம் முருகன் அன்பெல்லாம் முருகன் ஸ்தாவர ஜங்கமாய் ஸ்கந்தனாய் அருவுருவாய் ...... 355 முருகனாய் முதல்வனாய் ஆனவன் ஸ்கந்தகுரு ஸ்கந்தாஸ்ரமம் இருக்கும் ஸ்கந்தகுரு அடிபற்றிச் சரணம் அடைந்தவர்கள் சாயுஜ்யம் பெற்றிடுவர் சத்தியம் சொல்கின்றேன் சந்தேக மில்லையப்பா வேதங்கள் போற்றிடும் வடிவேலன் முருகனை நீ ...... 360 சந்தேகம் இல்லாமல் சத்தியமாய் நம்பிடுவாய் சத்திய மானதெய்வம் ஸ்கந்த குருநாதன் சத்தியம் காணவே நீ சத்தியமாய் நம்பிடப்பா சத்தியம் வேறல்ல ஸ்கந்தகுரு வேறல்ல ஸ்கந்தகுருவே சத்தியம் சத்தியமே ஸ்கந்தகுரு ...... 365 சத்தியமாய்ச் சொன்னதை சத்தியமாய் நம்பியே நீ சத்தியமாய் ஞானமாய் சதானந்த மாகிவிடு அழிவற்ற ப்ரம்மமாய் ஆக்கி விடுவான் முருகன் திருமறைகள் திருமுறைகள் செப்புவதும் இதுவேதான் ஸ்கந்தகுரு கவசமதை சொந்தமாக்கிக் கொண்டு நீ ...... 370 பொருளுணர்ந்து ஏத்திடப்பா பொல்லாப்பு வினையகலும் பிறவிப் பிணி அகலும் ப்ரம்மானந்த முண்டு இம்மையிலும் மறுமையிலும் இமையருனைப் போற்றிடுவர் மூவருமே முன்னிற்பர் யாவருமே பூஜிப்பர் அனுதினமும் கவசத்தை அன்புடன் ஏத்திடப்பா ...... 375 சிரத்தா பக்தியுடன் சிந்தையொன்றிச் செப்பிடப்பா கவலைய கன்றிடுமே கந்தனருள் பொங்கிடுமே பிறப்பும் இறப்பும் பிணிகளும் தொலைந்திடுமே கந்தன் கவசமே கவசமென்று உணர்ந்திடுவாய் கவசம் ஏத்துவீரேல் கலியை ஜெயித்திடலாம் ...... 380 கலி என்ற அரக்கனைக் கவசம் விரட்டிடுமே சொன்னபடிச் செய்து சுகமடைவாய் மனமே நீ ஸ்கந்தகுரு கவசத்தைக் கருத்தூன்றி ஏத்துவோர்க்கு அஷ்ட ஐஸ்வர்யம் தரும் அந்தமில்லா இன்பம் தரும் ஆல்போல் தழைத்திடுவன் அறுகுபோல் வேரோடிடுவன் ...... 385 வாழையடி வாழையைப்போல் வம்சமதைப் பெற்றிடுவன் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்ந்திடுவன் சாந்தியும் செளக்யமும் சர்வமங்களமும் பெருகிடுமே ஸ்கந்தகுரு கவசமிதை கருத்திருத்தி ஏற்றுவீரேல் கர்வம் காமக்குரோதம் கலிதோஷம் அகற்றுவிக்கும் ...... 390 முன்செய்த வினையகன்று முருகனருள் கிட்டிவிடும் அறம் பொருள் இன்பம் வீடு அதிசுலபமாய்க் கிட்டும் ஆசாரம் சீலமுடன் ஆதிநேம நிஷ்டையுடன் கள்ளமிலா உள்ளத்தோடு கந்தகுரு கவசம் தன்னை சிரத்தா பக்தியுடன் சிவகுமரனை நினைத்துப் ...... 395 பாராயணம் செய்வீரேல் பார்க்கலாம் கந்தனையும் கந்தகுரு கவசமிதை மண்டலம் நிஷ்டையுடன் பகலிரவு பாராமல் ஒருமனதாய் பகருவீரேல் திருமுருகன் வேல்கொண்டு திக்குகள் தோறும் நின்று காத்திடுவான் கந்தகுரு கவலை இல்லை நிச்சயமாய் ...... 400 ஞான ஸ்கந்தனின் திருவடியை நம்பியே நீ கந்தகுரு கவசம் தன்னை ஓதுவதே தவம் எனவே உணர்ந்துகொண்டு ஓதுவையேல் உனக்குப் பெரிதான இகபரசுகம் உண்டாம் எந்நாளும் துன்பம் இல்லை துன்பம் அகன்று விடும் தொந்திரைகள் நீங்கிவிடும் ...... 405 இன்பம் பெருகிவிடும் இஷ்டசித்தி கூடிவிடும் பிறவிப்பிணி அகற்றி ப்ரம்ம நிஷ்டையும் தந்து காத்து ரக்ஷிக்கும் கந்தகுரு கவசமுமே கவலையை விட்டுநீ கந்தகுரு கவசமிதை இருந்த படியிருந்து ஏற்றிவிடு ஏற்றினால் ...... 410 தெய்வங்கள் தேவர்கள் சித்தர்கள் பக்தர்கள் போற்றிடுவர் ஏவலுமே புரிந்திடுவர் நிச்சயமாய் ஸ்கந்தகுரு கவசம் சம்சயப் பேயோட்டும் அஞ்ஞானமும் அகற்றி அருள் ஒளியும் காட்டும் ஞான ஸ்கந்தகுரு நானென்றும் முன்நிற்பன் ...... 415 உள்ளொளியாய் இருந்து உன்னில் அவனாக்கிடுவன் தன்னில் உனைக்காட்டி உன்னில் தனைக்காட்டி எங்கும் தனைக்காட்டி எங்குமுனைக் காட்டிடுவான் ஸ்கந்தஜோதி யானகந்தன் கந்தகிரி இருந்து தண்டாயுதம் தாங்கித் தருகின்றான் காட்சியுமே ...... 420 கந்தன் புகழ் பாடக் கந்தகிரி வாருமினே கந்தகிரி வந்து நிதம் கண்டுய்ம்மின் ஜகத்தீரே கலிதோஷம் அகற்றுவிக்கும் கந்தகுரு கவசமிதை பாராயணம் செய்து பாரில் புகழ் பெறுமின் ஸ்கந்தகுரு கவச பலன் பற்றறுத்துப் பரம்கொடுக்கும் ...... 425 ஒருதரம் கவசம் ஓதின் உள்ளழுக்குப் போகும் இருதரம் ஏற்றுவீரேல் எண்ணியதெல்லாம் கிட்டும் மூன்றுதரம் ஓதின் முன்னிற்பன் ஸ்கந்தகுரு நான்குமுறை ஓதி தினம் நல்லவரம் பெறுவீர் ஐந்துமுறை தினமோதி பஞ்சாட்சரம் பெற்று ...... 430 ஆறுமுறை யோதி ஆறுதலைப் பெற்றிடுவீர் ஏழு முறை தினம் ஓதின் எல்லாம் வசமாகும் எட்டுமுறை ஏத்தில் அட்டமா சித்திகிட்டும் ஒன்பதுதரம் ஓதின் மரணபயம் ஒழியும் பத்துதரம் ஓதி நித்தம் பற்றறுத்து வாழ்வீரே ...... 435 கன்னிமார் ஓடையிலே நீராடி நீறுபூசிக் கந்தகுரு கவசம் ஓதி கந்தகிரி ஏறிவிட்டால் முந்தை வினை எல்லாம் கந்தன் அகற்றிடுவான் நிந்தைகள் நீங்கிவிடும் நிஷ்டையுமே கைகூடும் கன்னிமார் ஓடை நீரை கைகளில் நீ எடுத்துக் ...... 440 கந்தன் என்ற மந்திரத்தைக் கண்மூடி உருவேற்றி உச்சியிலும் தெளித்து உட்கொண்டு விட்டிட்டால் உன் சித்த மலம் அகன்று சித்த சுத்தியும் கொடுக்கும் கன்னிமார் தேவிகளைக் கன்னிமார் ஓடையிலே கண்டு வழிபட்டு கந்தகிரி ஏறிடுவீர் ...... 445 கந்தகிரி ஏறி ஞான ஸ்கந்தகுரு கவசமிதைப் பாராயணம் செய்துலகில் பாக்கியமெல்லாம் பெற்றுடுவீர். ...... 447 ஸ்ரீ கந்த குரு கவசம் முற்றிற்று.
The Shanmuga Kavasam is the works of his Greatness Saiva Sithantha Ganabanu Pamban ஓம் குமர குருதாச குருப்யோ நம: பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் அண்டமா யவனி யாகி யறியொணாப் பொருள தாகித் தொண்டர்கள் குருவு மாகித் துகளறு தெய்வ மாகி எண்டிசை போற்ற நின்ற வென்னரு ளீச னான திண்டிறற் சரவ ணத்தான்றினமுமென் சிரசைக் காக்க ஆதியாங் கயிலைச் செல்வ னணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் றானிரு நுதலைக் காக்க சோதியாந் தணிகை யீசன் றுரிசிலா விழியைக் காக்க நாதனாங் கார்த்தி கேய னாசியை நயந்து காக்க. இருசெவி களையுஞ் செவ்வே ளியல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பன் முழுதுநற் குமரன் காக்க துரிசறு கதுப்பை யானைத் துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச் சிவசுப்ர மணியன் காக்க. ஈசனாம் வாகு லேய னெனதுகந் தரத்தைக் காக்க தேசுறு îதாள்வி லாவுந் திருமகள் மருகன் காக்க ஆசிலா மார்பை யீரா றாயுதன் காக்க வென்றன் ஏசிலா முழுங்கை தன்னை யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க. உறுதியாய் முன்கை தன்னை யுமையிள மதலை காக்க தறுகணே றிடவே யென்கைத் தலத்தைமா முருகன் காக்க புறங்கையை யயிலோன் காக்க பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்குமான் மருகன் காக்க பின்முது கைச் சேய் காக்க. ஊணிறை வயிற்றை மஞ்ஞை யூர்தியோன் காக்க வம்புத் தோணிமிர் சுரேச னுந்திச் சுழியினைக் காக்க குய்ய நாணினை யங்கி கௌரி நந்தனன் காக்க பீஜ ஆணியைக் கந்தன் காக்க வறுமுகன் குதத்தைக் காக்க எஞ்சிடா திடுப்பை வேலுக் கிறைவனார் காக்க காக்க அஞ்சக னமொரி ரண்டு மரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருட்காங் கேயன் விளரடித் தொடையைக் காக்க செஞ்சர ணேச வாசான் றிமிருமுன் றொடையைக் காக்க. ஏரகத் தேவ னென்றா ளிருமுழங் காலுங் காக்க சீருடைக் கணைக்கா றன்னைச் சீரலை வாய்த்தே காக்க நேருடைப் பரடி ரண்டு நிகழ் பரங் கிரியன் காக்க சீரிய குதிக்கா றன்னைத் திருச்சோலை மலையன் காக்க. ஐயுறு மலையன் பாதத் தமர் விரலுங் காக்க பையுறு பழநி நாத பரனகங் காலைக் காக்க மெய்யுடன் முழுது மாதி விமலசண் முகவன் காக்க தெய்வநா யகவி சாகன் றினமுமென் னெஞ்சைக் காக்க. ஒலியெழ வுரத்த சத்தத் தொடுவரு பூதப் ரேதம் பலிகொளி ராக்க தப்பேய் பலகணத் தெவையா னாலுங் கிலிகொள வெனைவேல் காக்க கெடுபரர் செய்யுஞ் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம் வருத்திடா தயில்வேல் காக்க. ஓங்கிய சீற்ற மேகொண் டுவனிவில் வேல்சூ லங்கள் தாங்கிய தண்ட மெஃகந் தடிபர சீட்டி யாதி பாங்குடை யாயு தங்கள் பகைவரென் மேலே யோச்சின் தீங்குசெய் யாம லென்னைத் திருக்கைவேல் காக்க காக்க. ஒளவிய முளரூ னுண்போ ரசடர்பே யரக்கர் புல்லர் தெவ்வர்க கௌவரா னுèலுந் திடமுட னெனைமற் கட்டத் தவ்வியே வருவாராயிற் சராசர மெலாம்பு ரக்குங் கவ்வுடைச் சூர சண்டன கையயில் காக்க காக்க. கடுவிடப் பாந்தள் சிங்கங் கரடிநாய் புலிமா யானை கொடியகோ ணாய்கு ரங்கு கோலாமார்ச் சாலஞ் சம்பு நடையுடை யெதனா லேனு நானிடர்ப் பட்டி டாமற் சடிதியில் வடிவேல் காக்க சானவி முளைவேல் காக்க. ஙகரமே போற்ற ழீஇ ஞானவேல் காக்க வன்புள் சிகரிதே ணண்டுக் காலி செய்யனே றாலப் பல்லி நகமுடை யோந்தி பூரா னளிவண்டு புலியின் பூச்சி உகமிசை யிவையா வெற்கோ ரூறிலா தைவேல் காக்க. சலத்திலுய் வன்மீ னேறு தண்டுடைத் திருக்கை மற்றும் நிலத்திலுஞ் சலத்தி லுந்தா னெடுந்துயர் தரற்கே யுள்ள குலத்தினா னான்வ ருத்தங் கொண்டிடா தவ்வவ் வேளை பலத்துட னிருந்து காக்க பாவனி கூர்வேல் காக்க. ஞமலியம் பரியன் கைவே னவக்கிர சுக்கோள் காக்க சுமவிழி நோய் கடந்த சூலையாக் கிராண ரோகம் திமிர்கழல் வாதஞ் சோகை சிரமடி கர்ண ரோகம் எமையணு காம லேபன் னிருபுயன் சயவேல் காக்க. டமருகத் தடிபோ னைக்குத் தலையிடி கண்ட மாலை குமுறுவிப் புருதி குன்மங் குடல்வலி யீழை காசம் நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம் எமையடை யாம லேகுன் றெறிந்தவன் கைவேல் காக்க. இணக்கமில் லாத பித்த வெரிவுமா சுரங்கள் கைகால் முணக்கவே குறைக்குங் குஷ்ட மூலவெண் முளைதீ மந்தஞ் சணத்திலே கொல்லுஞ் சன்னி சாலமென் றறையு மிந்தப் பிணிக்குல மெனையா ளாமற் பெருஞ்சத்தி வடிவேல் காக்க. தவனமா ரோகம் வாதஞ் சயித்திய மரோச கம்மெய் சுவறவே செய்யு மூலச் சூடிளைப் புடற்று விக்கல் அவதிசெய் பேதி சீழ்நோயண்டவா தங்கள் சூலை எவையுமென் னிடத்தெய் தாம லெம்பிரான் றிணிவேல் காக்க. நமைப்புறு கிரந்தி வீக்க நணுகிடு பாண்டு சோபம் அமர்த்திடு கருமை யாகுபஃ றொழுநோய் கக்கல் இமைக்குமுன் னுறுவ லிப்போ டெழுபுடைப் பகந்த ராதி இமைப்பொழு தேனு மென்னை யெய்தாம லருள்வேல் காக்க. பல்லது கடித்து மீசை படபடென் றேது டிக்கக் கல்லினும் வலிய நெஞ்சக் காட்டியே யுருட்டி நோக்கி எல்லினங் கரிய மேனி யெமபடர் வரினு மென்னை ஒல்லையிற் றார காரி ஓம்ஐம் ரீம்வேல் காக்க. மண்ணிலு மரத்தின் மீது மலையிலு நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதுஞ் சாரிசெய்யூர்தி மீதும் விண்ணிலும் பிலத்தி னுள்ளும் வேறெந்த விடத்து மென்னை நண்ணிவந் தருளார் சஷ்டி நாதன்வேல் காக்க காக்க. யகரமே போற்சூ லேந்து நறும்புயன் வேல்முன் காக்க அகரமே முதலா மீரா றம்பகன் வேல்பின் காக்க சகரமோ டாறு மானோன் தன்கைவே னடுவிற் காக்க சிகரமின் றேவ மோலி திகழைவேல் கீழ்மேல் காக்க ரஞ்சித மொழிதே வானை நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல்கி ழக்கிற் றிடமுடன் காக்க வங்கி விஞ்சிடு தினையின் ஞான வீரன்வேல் காக்க தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்îதா னிகலுடைக் கரவேல் காக்க. லகரமே போற்கா ளிங்க னல்லுட னௌ¨ய நின்று தகரமர்த் தனமே செய்த சங்கரி மருகன் கைவேல் றிகழெனை நிருதி திக்கி னிலைபெறக் காக்க மேற்கில் இகலயில் காக்க வாயு வினிற்குகன் கதிர்வேல் காக்க. வடதிடை தன்னி லீசன் மகனருட் டிருவேல் காக்க விடையுடை யீசன் றிக்கில் வேதபோ தகன்வேல் காக்க நடக்கையி லிருக்கு ஞான்று நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க் கிடக்கையிற் றூங்கு ஞான்று கிரிதுளைத் துளவேல் காக்க. இழந்துபோ காத வாழ்வை யீயுமுத் தையனார் கைவேல் வழங்குநல் லூணுண் போது மால்விளை யாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம் பணிந்துநெஞ் சடக்கம் போதுஞ் செழுங்குணத் îதாடே காக்க திடமுடன் மயிலுங் காக்க. இளமையில் வாலி பத்தி லேறிடு வயோதி கத்தில் வளரறு முகச்சி வன்றான் வந்தெனைக் காக்க காக்க ஒளியெழு காலை முன்னே லோஞ்சிவ சாமி காக்க தௌ¨நடு பிற்ப கற்கால் சிவகுருநாதன் காக்க. இறகுடைக் கோழித் îதாகைக் கிறைமுனி ராவிற் காக்க திறலுடைச் சூர்ப்ப கைத்தே திகழ்பினி ராவிற் காக்க நறவிசேர் தாட்சி லம்ப னடுநிசி தன்னிற் காக்க மறைதொழு குழக னெங்கோன் மாறாது காக்க காக்க. இனமெனத் தொண்ட ரோடு மினக்கிடுஞ் செட்டி காக்க தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க நனியனு பூதி சொன்ன நாதர்கோன் காக்க வித்தைக் கனிவொடு சொன்ன தாசன் கடவுடான் காக்க வந்தே